திருச்சியில் இளம் தாய் மகனுடன் திடீர் மாயம் .
திருச்சி சிந்தாமணி வென்னிஸ் தெருவை சேர்ந்தவர் சின்ன ராஜா இவரது மகள் விஜயலட்சுமி (வயது 21) இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன்,மகள் உள்ளனர். இந்நிலையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் சுசிலா வீட்டில் விஜயலட்சுமி குழந்தையுடன் இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று விஜயலட்சுமி தனது மகன் யோக மித்ரனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக அவரது தாய் சுசீலா கோட்டை போலீஸ் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.