Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக அரசு தமிழகத்தை சீரழித்து விட்டது . பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

0

 

திருச்சியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர் பேசியதாவது:-

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மாயத் தோற்றத்தில் உள்ளன. இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்கிறார்.

திமுக கூட்டணி முதன்மையாக விளங்குவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை, பிரதமர் வேட்பாளரை தெரிவிக்கவில்லை. வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து, கம்யூ. கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிடுகிறார்.

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டுமென சிலர் முயற்சி செய்தனர். மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. திமுக என்ற தீய சக்தியை ஒழிக்க வேண்டும். 3 ஆண்டு திமுக ஆட்சியில், மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். 3 ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரிகூட அமையவில்லை. அதிமுக ஆட்சியில் மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுக. எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்த மாவட்டம் திருச்சி. காவிரி பாயும் பசுமை நிறைந்த மாவட்டம் திருச்சி.

14 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சி அதிகாரம் எங்களுக்கு முக்கியமில்லை. மக்கள் நலனே முக்கியம் என்பதாலேயே பாஜக கூட்டணியில் இருந்து விலகினோம்.

மரத்திற்கு மரம் தாவுவது போல் பாஜக, காங்கிரஸ் என்று கூட்டணி அமைத்து மத்தியில் பதவி வகித்தது திமுக. தமிழகத்தில் செல்வாக்கு இழந்த ஸ்டாலின் இந்தியா கூட்டணி என்ற போர்வையில் தேர்தலை சந்திக்கிறார்.

அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பலன்பெற கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்தி, மாநிலத்தை சீரழித்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ப. குமார், சீனிவாசன், பரஞ்ஜோதி , புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், கழக அமைப்பு செயலாளர்கள் ரத்தினவேல் , வளர்மதி, மனோகரன், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன் , திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் , திருச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், இப்ராம்ஷா, மாணவர் மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன், டிபன் கடை கார்த்திகேயன் , டாஸ்மாக் பிளாட்டோ , பகுதி செயலாளர் வட்டக் கழக செயலாளர் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

Leave A Reply

Your email address will not be published.