தாலி கட்டும் நேரத்தில் செல்போனுக்கு வந்த அந்தரங்க படங்கள்,திருமணத்தன்று தற்கொலை செய்து கொண்ட மணப்பெண் .. பழிவாங்கிய காதலனுக்கு வலை

ராமநாதபுரம் மாவட்டம் மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). இவருக்கும், லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக்காதலித்து வந்துள்ளனர் ..
இந்நிலையில், லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல்போகவே, சரிதா அவரிடமிருந்து பிரிந்துள்ளார். இதனை புரிந்து கொண்ட சரிதாவின் பெற்றோர், அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்தனர். அதன்படி இவர்களது திருமணம் கடந்த 30-ஆம் தேதி நடைபெறவிருந்தது. இதற்கான திருமண வேலைகள் வீட்டில் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.
தன்னுடன் நடைபெற இருந்த திருமணம் நின்று போனதைக் கேள்வியுற்ற முன்னாள் காதலன் லோகேஷ் கடும் ஆத்திரமடைந்தார். சரிதாவைப் பழிவாங்கும் எண்ணத்தில், அவருடன் முன்பு நெருக்கமாக ஜோடியாக எடுத்த புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்தத் தகவலும் அந்தப் புகைப்படங்களும் மணமகன் வீட்டாருக்குத் தெரியவர, அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து கடைசி நேரத்தில் திருமணத்தை அதிரடியாக ரத்து செய்தனர். உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் தன் திருமணம் நின்றதால் கடுமையாக மனமுடைந்த சரிதா, சமூகத்தின் முன் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சரிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால், சரிதாவின் சாவுக்குக் காரணமான லோகேஷை உடனடியாகக் கைது செய்யும் வரை உடலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி உறவினர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது தலைமறைவாகியுள்ள லோகேஷைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

