திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம் காரணமா ?
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம் காரணமா ?
திருச்சி மாவட்டம் மருங்காபுரி கஞ்சநாயக்கன்பட்டி சிங்கிலி பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 46 ) இவர் யாகபுரம் பகுதியில் ஒரு ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார். மதுப்பழக்கம் உள்ளது வாரத்தில் இரண்டு முறை மட்டுமே வீட்டுக்கு செல்வார் கடந்த 19-ந் தேதி வீட்டிலிருந்து சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. 
பின்னர் அவரது மனைவி தமயந்தி அவரைத் தேடிச் சென்ற போது செந்தில் வேல் மயங்கிய நிலையில் கிடந்தார்கஎனக் கூறப்படுகிறது. பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் செந்தில்வேல் பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து துவரங்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

