Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 1 1/2 வயது பெண் குழந்தையுடன் காதல் மனைவி மாயம்.கணவன் புகார்.

0

 

திருச்சியில்
1 1/2வயது குழந்தையுடன் காதல் மனைவி மாயம் கணவன் புகார் .

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை தமிழர் தெருவை சேர்ந்தவர் அன்வர் பாஷா (வயது 25)ஆட்டோ டிரைவர்.இவர் கரோலின் சந்தியா (வயது 23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிறிஸ்டினா என்ற 1
1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அன்வர் பாஷாவின் உறவினர் வீட்டு சுன்னத் விழாவில் கலந்து கொள்வது தொடர்பாக கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து அன்வர் பாஷா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த மனைவி கரோலின் சந்தியா மகள் கிறிஸ்டினா ஆகிய இரண்டு பேரை காணவில்லை.

2 பேரையும் பல இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அன்வர் பாஷா பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கரோலின் சந்தியா மற்றும் அவரது மகள் கிறிஸ்டினா ஆகிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.