Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இளம் மனைவி உள்ளிட்ட 2 பேர் மாயம்.

0

 

திருச்சியில்
இளம் மனைவி உள்ளிட்ட 2 பேர் திடீர் மாயம்.

திருச்சி தென்னுார் சின்னசாமி நகர்,அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் சீலன். இவரது மகள் ஜாஸ்மின் ( வயது 18) சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜாஸ்மின் கடைவீதிக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரை பல இடங்களில் தேடி பார்த்தேன் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாய் செல்வி தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகார் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜாஸ்மீனை தேடி வருகின்றனர்.

இதேபோன்று திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லாவண்யா (வயது 27) சம்பவத்தன்று வீட்டில் இருந்த லாவண்யா தாய் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறிய சென்றவர் அங்கு செல்லவில்லை.

இது தொடர்பாக அவரது கணவர் பாலமுருகன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.இதை யடுத்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாவண்யாவை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.