Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் கடத்த முயன்ற ரூ 37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.

0

 

திருச்சி விமான நிலையத்தில்
ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 ஆண் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்பொழுது அவர்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த
அமெரிக்க டாலர், சவுதி ரியால் மற்றும் யுஏஇ திர்காம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதன் இந்திய ரூபாய் மதிப்பு 37 லட்சத்து 93 ஆயிரத்து 845 ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்த 3 பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.