Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய ஓட்டுனருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை.

0

 

உரிமையாளரை தாக்கி லாரியை
கடத்திய ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை.

சென்னையைச் சேர்ந்தவர் ஆர். மணி (வயது 57). இவருக்கு சொந்தமான லாரியில் தஞ்சாவூர், மனோஜிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (40) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இருவரும் லாரியை மாறி மாறி இயக்கி பணியாற்றி சுமைகளை ஏற்றி இறக்குவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி, லாரியில் ஏற்றப்பட்ட சுமைகளில் பாதி இறங்கிய நிலையில், மீதி சுமைகளுயுடன், திருச்சி ராம்ஜீநகர் பகுதியில் லாரியை நிறுத்திய இருவரும், அங்கு உணவு உட்கொண்டனர். பின்னர் லாரியை உரிமையாளர் மணி ஓட்டுவதற்காக இருக்கையில் ஏற முயன்றுள்ளார். அப்போது, ஏற்கெனவே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த சந்தோஷ்குமார், உரிமையாளர் மணியை தாக்கி கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்திச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து மணி, ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை மீட்டனர்.

பின்னர் இது தொடர்பாக திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதில் உரிமையாளரை தாக்கி லாரியை கடத்திய சந்தோஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி மீனாசந்திரா தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஹேமந்த் ஆஜரானார்.

Leave A Reply

Your email address will not be published.