Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே.

0

 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வாய்ப்பு மங்கி விடும். அதனால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னை அணிக்கு வாழ்வா-சாவா? மோதல் என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் கேப்டன் பதவியை ஏற்கும் டோனி மாற்றத்தை கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரின் பேட்டிங் சீராக இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் ஓரிரு ஆட்டங்களில் மட்டுமே ஜொலித்துள்ளனர். அம்பத்தி ராயுடு மட்டுமே பேட்டிங்கில் தொடர்ந்து நன்றாக ஆடுகிறார். பந்து வீச்சிலும் இதே போன்ற நிலைமை தான் காணப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த சீசனில் பீல்டிங்கும் சொதப்பலாக உள்ளது. இதுவரை 13 கேட்ச்களை நழுவ விட்டுள்ளனர். மொத்தத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் வெற்றிப்பாதைக்கு திரும்பலாம். ஏற்கனவே தொடக்க லீக்கில் ஐதராபாத்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் வரிந்து கட்டும் என்று நம்பலாம்.

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணி பேட்டிங்கை விட பந்து வீச்சில் பலம் பொருந்திய அணியாக தென்படுகிறது. குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி பந்தில் ஐதராபாத் தோல்வியை தழுவியது.
இருப்பினும் அந்த ஆட்டத்தில் மணிக்கு அதிகபட்சமாக 153 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக் 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். புவனேஷ்வர்குமார், டி.நடராஜன், மார்கோ ஜேன்சனும் பந்துவீச்சு கூட்டணியை வலுப்படுத்துகிறார்கள். பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ராம், நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர் கைகொடுக்கிறார்கள். இதனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்

Leave A Reply

Your email address will not be published.