திருச்சி மாநகரில் சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சியில் உள்ள
65 வார்டுகளிலும் பெரும்பாலான சாலைகளில்
பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.
குறிப்பாக திருச்சி மையபகுதியில்
போக்குவரத்து நெரிசல் நிறைந்த காந்தி மார்க்கெட், பெரியகடைவீதி, மேவபுலிவார்ரோடு பகுதிகளில்
வணிகர்கள் தங்களது கடைகளுக்கு செல்வதற்கும்.
கடைகளுக்கு சரக்கு ஏற்றி இறங்குவதும் பல இன்னாலுக்கு ஆளாகிறார்கள்.
இவ்விடங்களுக்கு வந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலனோர் கீழே விழுந்து காயத்துடன் செல்கின்றனர்.பெரும் விபத்து நடக்கும் சாலை பணிகளை முடிக்கவேண்டும்.
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பெரும் துயரத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே மாநகராட்சி ஆணையர் போர்கால அடிப்படையில் சாலைகளை செப்பனிட்டு
பள்ளி மாணவ மாணவிகள்,பொதுமக்கள்,
வணிகர்களின் சிரமங்களை உடனடியாக
நிவர்த்தி செய்யுமாறு பாரதிய ஜனதா கட்சி மாநகர் மாவட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.