பேரறிஞர் அண்ணா அவர்களின் 53.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவினர் சார்பில்,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில்,
பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அதிமுக செயலாளர் ராவணன், மாவட்ட துணை செயலாளர் பி.சாந்தி, மாவட்ட மீனவரணி செயலாளர் பொன்னுசாமி, இலக்கிய அணி செயலாளர் டி.முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் எம்.சுரேஷ்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.