Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. திருச்சியில் இன்று 882 பாதிப்பு

0

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் இன்று புதிதாக 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,48,346 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 483 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,505 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 32,263 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,34,439 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 2,88,702 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று 2,217 பேருக்கும் திருச்சியில் 882 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இன்று மேலும் 3,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.