Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு முக்காடு: வெல்லமண்டி நடராஜன், ஜவகர் உடனடி நடவடிக்கை.

திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு முக்காடு: வெல்லமண்டி நடராஜன், ஜவகர் உடனடி நடவடிக்கை.

0

திருச்சி நீதிமன்றம் ரவுண்டானா அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட சம்பவம். உடனடி நடவடிக்கையில் இறங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

 

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையின் தலையில் காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்டு போடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அதிமுகவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவர்கலால் நேரு துண்டை அப்புறப்படுத்தினார்.

பின் இது குறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

திருச்சியின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில் எம்ஜிஆர் சிலைக்கு முக்காடு போட்ட சம்பவம் அறிந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உடனடியாக அப்பகுதிக்கு சென்று எம்ஜிஆர் சிலையை தண்ணீரால் சுத்தம் செய்து பாலாபிஷேகம் செய்தார். மாலை அணிவித்து மரியாதை செய்து பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியபோது இந்தச் செயலைச் செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்த சம்பவத்தின்போது கோர்ட் அருகே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.