Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில் நூல் வெளியிட்டு விழா .

0

'- Advertisement -

Ad banner

இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில் நூல் வெளியிட்டு விழா திருச்சி மாநகர் மாவட்டம் நேற்று (18.07.2026) சனிக்கிழமை மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மஹாலில் நடைபெற்றது

இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் சார்பில் நூல் வெளியிட்டு விழா .

திருச்சி மாநகர் மாவட்டம் இராசராசன் கல்லி பண்பாட்டுக் கழகம் சார்பில் தாஜ் திருமண மஹால் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் பொறியாளர் சு.செந்தில்குமரன் தலைமையில் நடந்தது.

விழாவிற்கு காவல் துணை ஆணையர் ராஜசேகரன், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், சுவாதி எஸ்.தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

விழாவிற்கு வந்தவர்களை திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் பாண்டித்துரை வரவேற்றார்.

முனைவர் ப.சுப்ரமணியன் அவர்கள் எழுதிய கம்பராமாயணம் “அருங்கவி அமுதம்” இரண்டு நூல்கள் வெளியீட்ட விழாவிற்கு முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஏ.கலியமூர்த்தி வெளியிட புறநகர் மாவட்டத் தலைவர் புலவர் ந.ப.மா. மனோகரன் பெற்றுக் கொண்டார்.

விழாவிற்கு பிரேம்குமார், மோகன்ராஜ், கலையழகன், மனோகரன், சந்திரசேகர்,சிவா தளபதி,தஷ்ணாமூர்த்தி மற்றும் பலர் கலந்துக்கொண்டார்கள்.

முடிவில் மாநகர மாவட்ட பொருளாளர் ஆர்.ராம மூர்த்தி நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.