Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வரும் 25ம் தேதி அரியலூர் , பெரம்பலூரில் முதல்வர் நேரில் ஆய்வு

வரும் 25ம் தேதி அரியலூர் , பெரம்பலூரில் முதல்வர் நேரில் ஆய்வு

0

*கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக, வரும் 25-ம் தேதி அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில், முதலமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.*

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கொரானா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுவரை 31 மாவட்டங்களில் ஆய்வுகளை முடித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 25-ம் தேதி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இந்த ஆய்வின்போது அந்த மாவட்டங்களில், புதிய வளர்ச்சி திட்டப் பணிகளையும் துவக்கி வைக்கவுள்ளார்
மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர், விவசாய அமைப்பினர் ஆகியோரிடமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.