நிரந்தர முதல்வராக விஜய் தொடர்ந்திட திருச்சி பச்சைநாச்சி அம்மன் கோவில் ஆர்கே ராஜா ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு.
தமிழக நிரந்தர முதல்வராக விஜய் தொடர்ந்திட திருச்சி பச்சைநாச்சி அம்மன் கோவில் ஆர்கே ராஜா ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பச்சைநாச்சி அம்மன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தினார் தமிழக முதல்வர் விஜய் .
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை, ஆடிப்பூரத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், பிளவுஸ் பிட், வளையல், குங்குமம், மஞ்சள், மஞ்சள்கயிறு போன்ற பிரசாதங்கள் மற்றும் கூழ் வழங்கி, தமிழக நிரந்தர முதல்வராக ஜோசப் விஜய் அவர்கள் இருக்க வேண்டி விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் அம்மனின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்தனர். 
இவ்விழாவில் சரண்ராஜ், தனசேகர், நரேஷ் குமார், சுரேஷ்குமார், ரேணுகா தேவி, நந்தகுமார், மணி, டேவிட், அண்ணாதுரை, கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.அம்மன் அருளால் நல்லாட்சி மலரட்டும்.தமிழக முதல்வர் விஜய் பாதை வெற்றிப் பாதையாகட்டும் என வாழ்த்தி சென்றனர் பக்தர்கள்.

