Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஆழ்வாரத்தோப்பு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்ற பெண் உள்ளிட்ட 3 பேர் கைது. கஞ்சா, செல்போன், வாகனம் பறிமுதல் .

0

'- Advertisement -

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில்

கஞ்சா விற்பனை செய்த கும்பல் அதிரடி கைது.

 

பணம், இருசக்கர வாகனம் பறிமுதல்.

 

Suresh

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தில்லை நகர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர் .அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கோபிநாதன் மனைவி கோமதி (வயது 55), ராம்ஜி நகர் காந்தி நகரை சேர்ந்த சதீஷ் (வயது 42), திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த அப்துல் யூனுஸ் (வயது 22 )ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய கோபிநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் ரூ.5,200 பணம், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை தில்லை நகர் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.