Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாலக்கரையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து கடனாளியான வாலிபர் தலைமறைவு. மனைவி புகார்.

0

'- Advertisement -

 

பாலக்கரையில்

Suresh

கடன் பிரச்சனையால் வாலிபர் மாயம்

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மகன் ரியாஸ் அலி (வயது 36) இவர் பங்கு சந்தையில் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இவர் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்ததாக தெரிய வருகிறது . முதலில் லாபம் கிடைத்து பின்பு நஷ்டம் அடைய தொடங்கியுள்ளது இதனைத் தொடர்ந்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் கடன் வாங்கியும் முதலீடு செய்து உள்ளார் .

மேலும் பங்கு சந்தையில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் ரியாஸ் அலி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பாக அவரது மனைவி ரேஷ்மி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரியாஸ் அலியை தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.