அ.தி.மு.க. மாநகர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா .

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலகம் தில்லைநகர் (
கி ஆ பெ பள்ளி பின்புறம் ) 5-வது குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சி.கார்த்திகேயன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார். மாநில அமைப்பு செயலாளர்
ரத்தினவேல், மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவம் ஆகியோர் சேர்ந்து புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மாவட்ட பொருளாளர் ராஜசேகரன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர் மாவட்ட துணை செயலாளர் வனிதா,திருச்சி மான்ற உறுப்பினர் அம்பிகாபதி,பகுதி செயலாளர்கள் எம் ஆர் ஆர் முஸ்தபா,சுரேந்தர், அன்பழகன், டி.ஆர் சுரேஷ்குமார்,கோழி கடை பாலு உள்ளிட்ட திருச்சி மாநகர மாவட்ட அதிமுகவின் ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.

