திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மஞ்சள் காமாலை நோய்க்காக
நாட்டு மருந்து சாப்பிட்ட வாலிபர் திடீர் சாவு

போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் மன்றம் பகுதி சேர்ந்தவர் சாகுல் அகமது..இவரது மகன் முகமது ரியாஸ் (வயது 21) இவருக்கு கடந்த15 நாட்களுக்கு முன்பு திடீரென்று மஞ்சகாமாலை நோய் வந்தது. இதையடுத்து அவர் மஞ்சகாமாலை குணமாக நாட்டு மருந்து சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் அந்த பகுதியில் உள்ள பாலமுருகன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார் இதையடுத்து முகமது ரியாஸ்யை ஆபத்தான நிலையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முகமது ரியாஸ் திடீரென்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.