Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பணத்தில் புரளும் ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ். பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தொடர்பா ?

0

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை காதுகொடுத்துக் கேட்பதற்காக ‘ஆசிரியர் மனசு’ என்கிற திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 2022-ல் அறிமுகப்படுத்தினார்.

இப்போது இந்தத் திட்டத்தின் மீதே அடுக்கடுக்கான புகார்களை அடுக்குகிறார்கள் ஆசிரியர்கள்.

‘ஆசிரியர் மனசு’ திட்டத்​திற்காக திருச்​சியில் தனி அலுவலகம் ஒன்றைத் தொடங்கி வைத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டத்தின் மாநில ஒருங்​கிணைப்பாளராக இடைநிலை ஆசிரியரான ‘சிகரம்’ சதீஷ் என்பவரை நியமித்​தார்.

தற்போது இவரை மையப்​படுத்​தித்தான் இப்போது புகார்களும் வெளிவந்துள்ளன . செல்வாக்கு, பணம் பலம், லாபி செய்யும் ஆசிரியர்​களின் கோரிக்கைகள் மட்டுமே கவனிக்​கப்​படு​கிறது. இதனால் இந்தத் திட்டத்தின் நோக்கமே திசைமாறிப் போய்க் கொண்டிருக்​கிறது என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்​கின்​றனர்.

பெயர் வெளியிட வேண்டாம் என்ற வேண்டு​கோளுடன் இதுகுறித்து பேசிய ஆசிரியர்கள், ‘இந்தத் திட்டம் தொடக்​கத்தில் சிறப்பாகத்தான் செயல்பட்டது. ஆனால், போகப் போக நோக்கம் சிதைந்து தொய்வடைந்து விட்டது. சம்பளம், பதவி உயர்வு, பணி மாறுதல், பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவது, புதிய பள்ளி தொடங்குவதற்கான ஆணை பெறுவது உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகள் மட்டுமே நிறைவேற்​றப்​படுகிறது.

அதேசமயம், செல்வாக்கான ஆசிரியர்​களுக்கு மட்டும் ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தில் கேட்டதெல்லாம் கிடைக்​கிறது.

தற்போது கல்வித்​துறையில் எந்த அதிகாரியை எங்கு பணிக்கு அமர்த்துவது என்பதை முடிவு செய்யும் அதிகார மையமாகவே ‘சிகரம்’ திகழ்​கிறது. சங்கங்களை உடைத்து புது சங்கங்களை உருவாக்கு​கிறது. ஜனவரி 5-ம் தேதி திருச்​சி​யில், ‘தமிழ்நாடு கல்வித் துறை தட்டச்​சர்கள் சங்கம்’ என்று ஒரு புது சங்கம் தொடங்​கப்​பட்டது. இதில், ‘சிகரம்’ சதீஷும் அமைச்சர் அன்பில் மகேஸும் பங்கேற்​றனர்.

அமைச்​சருக்கு நெருக்​க​மானவராக இருப்​பதால் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளே சதீஷைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆசிரியர்​களின் பிரச்​சினை​களைச் சொல்லத்தான் ‘ஆசிரியர் மனசு’ திட்டத்தை ஆரம்பித்​தார்கள். ஆனால், அந்தத் திட்டத்​திலேயே இத்தனை குறைகள் என்றால் எங்கு போய் சொல்வது?’ என்றனர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஆரம்பப்​பள்ளி ஆசிரியர் கூட்ட​ணியின் திருச்சி மாவட்டச் செயலாளர் சி.ஆரோக்​கிய​ராஜ், ‘இத்திட்​டத்தால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்​களுக்கோ, பள்ளி​களுக்கோ எந்த நன்மையும் கிடையாது. திட்ட ஒருங்​கிணைப்​பாளரான ‘சிகரம்’ சதீஷ் தனியார் பள்ளி​களின் நலனுக்காக மட்டுமே செயல்​படு​கிறார். தன்னை அழைத்து விழா நடத்தும் பள்ளி​களுக்கு முக்கி​யத்துவம் அளிக்​கிறார். மற்றபடி ஆசிரியர், மாணவர் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினையையும் அமைச்சர் கவனத்​துக்கு இவர் கொண்டு செல்வ​தில்லை. இது குறித்து அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிச்சையும் இல்லை.

அடுக்​கடுக்கான குற்றச்​சாட்டு​களுக்கு ஆளாகி வரும் சதீஷை திட்ட ஒருங்​கிணைப்​பாளர் பொறுப்​பிலிருந்து மாற்றி​விட்டு தகுதியான வேறொருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். பணி நிரவலில் திருப்பைஞ்ஞீலிக்கு வந்த ஒரு தலைமை ஆசிரியர் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒரே மாதத்தில் பணி மாறுதல் பெற்றுச் செல்கிறார்.

இப்படி செல்வாக்கு மிக்கவர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்​தக்​கூடிய சமூக அமைப்பா இது? இதில் நானே நேரடி​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளேன். மண்ணச்​சநல்லூர் ஒன்றி​யத்​திலிருந்து லால்குடி ஒன்றி​யத்​துக்கு என்னை பணி மாறுதல் செய்தனர். ஒன்றரை ஆண்டுகள் நீதிமன்​றத்தில் போராடி, மீண்டும் மண்ணச்​ச நல்லூர்
ஒன்றி​யத்தில் பணிக்கு திரும்​பினேன்.
இதனால் எனது சீனியாரிட்டி பாதிக்​கப்​பட்​டுள்ளது. என்னைப் போல் இன்னும் எத்தனையோ ஆசிரியர்கள் குமுறிப்போய் உள்ளனர்’ என்றார்.

இந்தக் குற்றச்​சாட்டுகள் தொடர்பாக ‘ஆசிரியர் மனசு’ திட்ட ஒருங்​கிணைப்​பாளர் ‘சிகரம்’ சதீஷிடம் விளக்கம் கேட்டோம். ‘இந்தத் திட்டத்தில் இதுவரை 17 ஆயிரத்​துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்​பட்​டுள்ளன.

இதில், தனிப்பட்ட முறையில் பாதிக்​கப்பட்ட ஆசிரியர்​களின் மனுக்கள் ஒன்றுகூட நிலுவையில் இல்லை. சிபிஎஸ் ரத்து போன்ற அரசின் கொள்கை சார்ந்த விஷயங்கள் தொடர்பான மனுக்கள் தான் நிலுவையில் இருக்​கின்றன. எந்தவித பிரதிபலனும் பாராமல் ஆசிரியர்​களின் கோரிக்கைகளை தொகுத்து அமைச்​சருக்​கும், அதிகாரி​களுக்கும் அனுப்பி வைக்கும் போஸ்ட் மேன் வேலையை மட்டுமே நான் செய்கிறேன். அதிகார மையமாக செயல்​பட்​ட​தில்லை.

சிறு சிறு சங்கங்களை சார்ந்​துள்ள ஆசிரியர்​களுக்கு இந்தத்​திட்டம் பெரிய வடிகாலாக உள்ளது. இதை பொறுக்க முடியாத சிலர் என் மீதும், திட்டத்தின் மீதும் வீண் பழியை சுமத்து​கின்​றனர். கீழ்நிலையில் உள்ள ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களை கேட்டால் இத்திட்​டத்தின் செயல்​பாடுகள் நன்கு தெரியும். எந்த அதிகாரியையும் பணியில் அமர்ந்தும் அதிகாரம் எனக்குக் கிடையாது.

இது அதிகாரப் பதவி அல்ல. ஆசிரியர்களை ஒருங்​கிணைக்கும் பொறுப்பு. காரியம் சாதிக்க முடியாத சில ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பொத்தாம் பொதுவாக குற்றம்​சாட்டு​கின்​றனர். வேறு என்ன சொல்ல’ என்றார்.

சிகரம் சதீஷின் மறுப்பு குறித்து மற்றொரு ஆசிரியர் கூறும்போது:-
எனக்கு தெரிந்த நபரிடமே பணியிடை மாற்றத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என பெரும் தொகை வசூல் செய்து உள்ளார் . இதுபோன்று பலரிடமும் அவர் லட்சக்கணக்கில்  வசூல் செய்து உள்ளார் என கூறப்படுகிறது. மேலும் பணம் தர முடியாத பெண் ஆசிரியைகளிடம் பாலியல் ரீதியாகவும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது .
இப்பொறுப்பிலிருந்து இவரை நீக்கினால் பல பெண்கள் இவர் மீது பாலியல் புகார் அளிக்கவும் தயாராக உள்ளனர். முறையான விசாரணை நடத்தினால் இவர் கண்டிப்பாக சிக்குவார் எனக் கூறினார் .

ஆயிரம் தான் கூறினாலும் நெருப்​பின்றி புகையாது எனவும் கூறுகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இந்த விவகாரத்தை இனியும் உரிய முறையில் விசாரிக்​கா​விட்டால் ‘ஆசிரியர் மனசு’ திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே திசை மாறிப் போய்விடும் என கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்​ பெருமக்கள்.

Leave A Reply

Your email address will not be published.