திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் கைது.
திருச்சி திருவெறும்பூர் நொச்சி வயல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன் (வயது 30).
இவர் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு திருமணமான இளம் பெண் தனது வீட்டில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தபோது
வென்டிலேட்டர் வழியாக செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த
அந்த இளம் பெண் கூச்சலிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து
எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அழகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.