

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இன்று அதிகாலை தனியார் பால் நிறுவனத்தில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அமோனியம் குளோரைடு வாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் வெடித்து அப்பகுதி முழுவதும் பரவியதால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாசக்கோளாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

