திருச்சியில் நில தகராறில் உறவுக்கார பெண்ணை தாக்கிய 2 பேர் கைது.
திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியில் சேர்ந்தவர் தேன்மொழி
(வயது 37).
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இவருடைய உறவினர்கள் ராஜசேகர்
(வயது 37), ராம்குமார் (34) ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு தேன்மொழியின் வீட்டுக்கு சென்ற இருவரும், அவரை தகாத வார்த்தையால் திட்டி, அடித்து, தலை முடியை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகர், ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.