திருச்சி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி மாவட்ட மாணவரணி சார்பாக
மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் வீர வணக்க நாள் அஞ்சலி.
அமமுக பொருளாளரும்,செய்தி தொடர்பாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவும்,திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான ஆர்.மனோகரன் தலைமையில்
25.01.2023 காலை 10.00 மணி அளவில் கம்பரசம் பேட்டை தடுப்பு அணையில் உள்ள தியாகி சின்னசாமியின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதுசமயம் மாநில நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,மகளிரணி நிர்வாகிகள்,பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள்,நகர கழக நிர்வாகிகள்,வட்ட கழக நிர்வாகிகள்,பேரூர் கழக நிர்வாகிகள்,ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.