திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழாவில் நலத்திட்டங்கள் வழங்கிய சங்கத் தலைவர் கந்தன்
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழா தலைவர் எஸ். கந்தன் உதவிகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் மாநில தலைவரும், திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான எஸ். கந்தன் தலைமையில் விழா நடைபெற்றது. சுமைதூக்கும் கூலி தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோருக்கு தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் எஸ். கந்தன், செயல் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், பொருளாளர் அம்பாள் என்.பி ஸ்ரீ ராம்குமார்,மாநிலத் துணைத் தலைவர் ஆர். தியாகராஜன் ஆகியோர் 10 கிலோ அரிசி மூட்டை, மளிகை சாமான்களை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதே போல் திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்க செயலாளர் எஸ். சரவணன், பொருளாளர் எஸ். சதீஷ்குமார், துணைத்தலைவர் எம். ராஜா, இணைச் செயலாளர் ஆர்.கார்த்திக், ஆலோசகர் கே. ரெங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

