Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மண்டலம் 3ல் நாளை மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம்.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்.

0

திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அறிவுரையின்படி, திருச்சி மாநகராட்சி சார்பில் “”””மக்களைத்தேடி மாநகராட்சி”” குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமையன்று நடைபெற்று வருகிறது.
“”””மக்களைத்தேடி மாநகராட்சி”” குறை தீர்க்கும் முகாம் வருகின்ற 28ம் தேதி மண்டலம் எண்:3 கைலாஷ் நகர், காட்டூர் சி.கே.சுமதி சந்தோஷ் மஹாலில் நடைபெற உள்ளது. இம்மண்டல அலுவலகத்திற்குட்பட்ட 13 வார்டு பகுதி பொதுமக்களும் தங்களது குறைகளை மனுக்களாக இக்குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன் பெறலாம்.

எனவே அந்தந்த மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.