Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தமிழ்நாடு ஹோட்டலில் ரூ.4.17 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

0

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் வளாகத்தில் ரூபாய் 4 கோடியே 17இலட்சத்து 10ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்கினைத் திறந்து வைத்தார்.

இதனையொட்டி திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் .
பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் .அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆர்.
வைத்திநாதன், , மாவட்ட ஊராட்சித் தலைவர் .இராஜேந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மத்திய மண்டல மேலாளர்.தி.மு.கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் .முனிசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலர்.ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.