திருச்சி ஓடத்துறை
கருமாதி மண்டபத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.
திருச்சி ஓடத்துறை கருமாதி மண்டபம் படிக்கட்டு குளிக்கும் இடத்தில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக சிந்தாமணி தேவதானம் கிராம நிர்வாக அதிகாரி கிரேசி மேரி கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பெயரில் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை .
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.