நாளை பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள்.திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் அறிக்கை.
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, பேரறிஞர் அண்ணா அவர்களின் 53-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு, அஇஅதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியதை செலுத்தபடவுள்ளது.
அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், MGR மன்றம், அம்மா பேரவை, MGR இளைஞர் அணி, மகளீர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப்பிரிவு, மீனவர் அணி, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி,கலைப்பிரிவு, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மற்றும், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்,
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் செய ரர்கள் வீராங்கணைகள், மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும், கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.