Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

0

'- Advertisement -

மனித குலத்தைக் காக்க மிக வேகமாகவும் அதோடு முழுமையாக குணமடைய வேண்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடு செயல்பட்டு வரும் திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையானது

தனது அங்கமாகிய சேவை தொண்டு நிறுவனம் ஆகிய தனபாக்கியம் கணேசன் பொன் மெமோரியல் டிரஸ்ட் உடன் சேர்ந்து பல ஏழைகளுக்கு பல நல்ல இலவச மருத்துவ சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

தற்போது மேலும் ஒரு படி சேன்று தொலைநோக்கு பார்வையோடு மருத்துவமனைக்கு வந்து செல்ல முடியாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது.

Suresh

இந்த இலவச ஆம்புலன்ஸ் நன்கொடையாக
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பௌத்த சங்கத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஷித் காம்ளே மற்றும் ரோஸன்னா காம்ளே ஆகியோர் வழங்கினர்‌.

இந்த இலவச ஆம்புலன்ஸ் அதிநவீன சிறப்புகளாக முதல் உதவி செய்யும் வசதி, ஆக்சிஜன் வசதியோடு செயல்பட்டு வருகிறது.

இந்த நவீன வசதி கொண்ட இலவச ஆம்புலன்ஸ் சேவையை இருதய நோய் நிபுணர் மருத்துவர் பாலசுப்ரமணியன் மற்றும் பெங்களூரு பௌத்த சங்கத்தை சேர்ந்த ரவி கீர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் திருச்சி ஹர்ஷமித்தர மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவர் கோவிந்தராஜ் மற்றும் மருத்துவர் சசி பிரியா கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த நவீன வசதி கொண்ட இலவச ஆம்புலன்ஸ் வசதியை பெற பொதுமக்கள் 73 73 73 1008 அலைபேசியை தொடர்பு கொண்டு 24 மணி நேரம் (எந்த மருத்துவமனை செல்லவும் ) இலவச சேவை பெற்றுக்கொள்ளலாம் என ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர். கோவிந்தராஜ் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.