Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட வேண்டும். மா.செ.பரஞ்ஜோதி அறிக்கை

0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளையொட்டி, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் .எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க,

கழகப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி, வருகிற 24.02.2021-ந்தேதி (புதன் கிழமை) திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலுள்ள

சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப்பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள், ஏழை-எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுமறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.