Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மனித சங்கிலி போராட்டம்

0

திருச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மனிதசங்கிலி போராட்டம்.

தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அண்மையில் ஏழு சாதி உள்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிலையில் முதலமைச்சரின் அறிவிப்புத் தொடர்பாக அரசாணை வெளியிடக் கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் சார்பில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் இமான் சேகர், மத்திய மாவட்ட செயலாளர் குருச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயம் ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசானது இந்தப் பரிந்துரையை ஏற்று, தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும். மேலும் பட்டியலிலிருந்து ஏழு சமுதாயங்களையும் வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்தப் போராட்டத்தில் சமயபுரம் ராமு, பாலகங்காதரன், செந்தில்குமார், மலைக்கோட்டை பகுதி செயலாளர் சுப்பிரமணியன் உட்பட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.