


திருச்சி மதுரை சாலை நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 53), இவரது மகன் பயாஸ் (வயது 25) இளங்கலை வேதியியல் படிப்பை முடித்துவிட்டு கத்தார் நாட்டில் பணியாற்றி வந்தார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக திருச்சி வந்தவர் இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை எடுத்து கடந்த எட்டாம் தேதி இரவு இடுப்பு வலி அதிகமானதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இச்சம்பவ இடம் சென்ற கோட்டை காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவருடைய தந்தை பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

