Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.20 கோடி இலக்கு நிர்ணயம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி.

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.20 கோடி இலக்கு நிர்ணயம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பேட்டி.

0

'- Advertisement -

திருச்சி கோ ஆப்டெக்ஸில் தீபாவளி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார் .

Ad banner

இந்த ஆண்டு 20 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ன பேட்டி.

கோ-ஆப்டெக்ஸில் தமிழக அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை வழங்கி வருகிறது.

அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டிற்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.

இந்த விற்பனை நிலையத்தில் கோவை மென் பட்டுப்புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள், தலையணை உறைகள்,வேட்டி,
லுங்கி ,துண்டு,பருத்தி சட்டைகள்,திரை சீலைகள் உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதனை‌ ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு விலை,தரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் இந்த ஆண்டிற்கான 30 % தள்ளுபடி உடன் கூடிய முதல் விற்பனையை வாடிக்கையாளர் அமுதா அர்ஜுனன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு வழங்கினார்.

கடந்த தீபாவளி பண்டிகையின் போது திருச்சி மண்டலத்தில் 7.38 கோடி விற்பனை நடைபெற்றது.

தற்போது இந்த தீபாவளிக்கு 20 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பேட்டியின்போது கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.