திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டீ ஸ்டால் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரிக்கு எதிராக ஆட்சியரிடம் புகார் மனு.

திருச்சி மாவட்ட டீஸ்டால் நலசங்க மாநில அமைப்பாளர் “காந்தியவாதி” ஐயா ராவுத்தர்ஷாவை மிரட்டி,
குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல், சிறுநீர் கழிக்க அனுமதிக்காமல் சட்டவிரோதமாக மனித உரிமை மீறலில் ஈடுபட்டு அடைத்து வைத்து,
அதிகார துஷ்பிரோயகத்தில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி,
இன்று 13.09.2021ந் தேதி திருச்சி மாவட்ட டீ ஸ்டால் நலசங்க உறுப்பினர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மேற்படி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.






