Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரில் 100 டிகிரியை தாண்டியது வெயில். பொதுமக்கள் அவதி

0

'- Advertisement -

திருச்சி மாநகரில் அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே அனல் பறக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 

இன்று 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

 

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, திருச்சியில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

 

ஆனால், இந்த ஆண்டு மாா்ச் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கத்தை மக்கள் உணா்ந்துள்ளனா்.

 

குறிப்பாக நேற்றும் வியாழக்கிழமை திருச்சி மாநகரில் வெயில் 100.04 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.

 

கடும் வெயிலின் காரணமாக, மாணவிகள் பலரும் துப்பட்டாவையும்,

 

பெண்களில் சிலா் தங்களது சேலையை தலையில் போா்த்தியும், சிலா் குடைகளை பயன்படுத்தியும் வெயில் தாக்கத்தை எதிா்கொண்டனா்.

 

ஆண்கள் பலரும் தங்களது கைக்குட்டையை தலையில் கட்டியிருந்தனா். இனிவரும் நாள்களிலும் இதேபோல் வெப்பம் பதிவாகக் கூடும் என வானிலை ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.

 

வெயில் தாக்கம் காரணமாக குளிா்பானங்கள், தா்பூசணி உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

 

பொதுமக்களின் தாகம் தீர்க்கும் திருச்சி ஐயப்பன் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் நீர் மோர் அருந்தி செல்கின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.