Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அனுமதியின்றி மணல் கடத்திய வழக்கில் 6 பேர் கைது.

0

'- Advertisement -

 

திருச்சியில், உரிமமின்றி மணல் கடத்திய வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில், உரிய அனுமதியின்றி சிலர் மாட்டு வண்டிகளில் தொடர்ந்து மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார், நேற்று வெள்ளிக்கிழமை அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில் சிலர் உரிமமின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து கோட்ராப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா, மனுநீதி , கார்த்திக், கிளியூரைச் சேர்ந்த மனோகர், சுப்ரமணியன், கஜேந்திரன் ஆகிய 6 பேர் மீதும் திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மணல் வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.