ஆக்கிரமிப்பு அகற்ற கோரி திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை புத்தூர் குளத்து மேட்டு தெரு பொதுமக்கள் புலம்பல்
புத்தூர், குளத்துமேட்டுத் தெரு பொதுமக்கள் மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள மனதில் கூறியிருப்பதாவது:-

நடைபாதை மெயின் தெருவில் உள்ள பில்லரை அகற்றக் கோரி.
திருச்சிராப்பள்ளி, புத்தூர், குளத்துமேட்டுத் தெருவில் வசித்துவரும் ஊர்ப்பொதுமக்களாகிய நாங்கள், நடந்து வரும் பாதையில் அதாவது மெயின் தெருவில் குமரவேல் அவர்கள் தற்போது பில்லர் கட்டுவதற்காக நடத்தி வரும் கட்டுமானப் பணிகளை நிறுத்தக்கோரியும், அதை அகற்றக்கோரியும் மற்றும் பொதுமக்கள் பொது பயன்பாட்டில் உள்ள அடிகுழாய் இந்தக் கட்டுமானப்பணியில் உள்ளடக்கமாய் வருவதால் அதை மீட்டுத்தரக் கோரியும் தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் ஏன அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்
மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி பொதுமக்கள் புழம்பி வருகின்றனர்.

