திருச்சி பொன்மலை ஆர்மரிகேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் .
திருச்சி பொன்மலை ஆர்மரிகேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர்

உண்ணாவிரத போராட்டம் .
இன்று நடைபெற்றது .
இண்டர் டிவிசன் டிரான்ஸ்பர்
,இண்டர் ரயில்வே டிரான்ஸ்பரில் இடம் மாற்றத்திற்கு பதிந்து தடையில்லா சான்று
பெற்ற தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
10 சதவிகிதம் தெர்ஸ்கோல்டு முறையை நீக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர். இ. யு. பொன்மலை
பணிமனை கோட்டம் சார்பில் இன்று பொன்மலை ஆர்மரிகேட் காந்தி சிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பணிமனை கோட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை உதவி பொதுச் செயலாளர் சந்தான செல்வம் துவங்கி வைத்தார். போராட்டத்தை விளக்கிஉதவி கோட்ட செயலாளர்கள் , சங்கர், உச்சிமாகாளி, செல்வம், கோட்ட உதவி தலைவர்கள்பதுரூதீன், கார்த்திக், பிரான்ஷிஸ் சேவியர், டி.ஆர்.பி.யுஉதவி பொதுச் செயலாளர் மனோகர் கோட்ட உதவி தலைவர் மகேந்திரன் ஆகியோர் பேசினர்.
பெல் சி.ஐ.டி.யு தொழிற்சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர், டி.ஆர்.இ.யு பொதுச் செயலாளர் ஏ.எம். பேபி ஷகிலா ஆகியோர் சிறப்புரையாற்றினர் இதில் அனைத்து கிளை நிர்வாகிகள், அனைத்து கமிட்டி உறுப்பினர்கள்,மற்ற மாநில ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

