Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ் இடம் கோரிக்கை

0

'- Advertisement -

திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

 

Ad banner

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏவை சந்தித்து மனு அளித்தனர்

 

 

திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ ரமேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில்,

திருவானைக்காவல் பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் இந்து சமய அறநிலையத்துறையால் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ ரமேஷ் விரைவில் இது சம்பந்தமாக அரசுத்துறை அதிகாரிகள் அனைவரையும் கலந்து ஆலோசித்து நல்லதொரு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.இந்த நிகழ்வில் திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் மீட்பு குழுவின் தலைவர் எம். மாரி என்கிற பத்மநாதன்,செயலாளர் சந்தோஷ்,குரு சுப்பிரமணியன்,நாகராஜன்,வழக்கறிஞர் பாலு மகேந்திரன்,பிரசாத ஸ்டால் சத்யா ஞானமூர்த்தி குருக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.