திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு.

மர்ம நபரை தேடும் போலீசார் .
திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோடு காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பஜித்ரன் இவரது மனைவி சுவாதி (வயது 72) இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.இவர் சென்னையில் மகள் வீட்டில் வசித்து வருகிறார் அவ்வப்போது திருச்சி குளவாய்பட்டி ரோடு காவேரி நகரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் நுழைந்த மர்ம நபர் கழுத்தில் கடந்த ஏழு சவரன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சுவாதி அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

