திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது

திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர் அப்போது காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ்ராஜ் (வயது 20) சபரி ராகவன் ஆகிய இருவரும் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாடகரை காவல் நிலைய போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசி பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

