அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர், சீனிவாசன், தலைமையில் கிழக்கு தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி அம்பேத்காரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.


இன்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்,
முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன், தலைமையில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பத்மநாதன்,அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வெல்லமண்டி ஜவகர்,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன்,கவுன்சிலர் அம்பிகாபதி, பகுதி செயலாளர்கள் கலைவாணன், சுரேந்தர், வெங்கட் பிரபு ,ரோஜர், அன்பழகன், எம் ஆர் ஆர் முஸ்தபா, சிந்தை முத்துக்குமார்.
ஏர்போர்ட் விஜி, அணி நிர்வாகிகள் ஞானசேகர்,லோகநாதன், ரஜினிகாந்த் , டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ டி எஸ் எம் செல்வமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

