திருச்சி அருகே காப்புக்காட்டில் எரிந்த அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம். உடலை வாங்க மறுத்து சாலை மறியல் .
திருச்சி அருகே காப்புக்காட்டில் எரிந்த அரை நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம்.
காதலனின் தற்கொலைக்கு காரணமானதால் பட்டதாரி இளம்பெண் எரித்துக் கொலை?
உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டம்.
போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் .
திருச்சி அருகே காப்புக்காட்டில் இளம்பெண் உடல் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது.போலீஸ் விசாரணையில் காதலன் தற்கொலைக்கு காரணகாரணமானதால், இளம்பெண்ணை கடத்தி எரித்துக் கொன்றதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி.
இவரது மனைவி கலாவதி. இந்த தம்பதியருக்கு மீராஜாஸ்மின் (வயது 22) என்ற மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். குழந்தைகளின் கல்விக்காக அந்தோணிசாமி திருச்சி வயலூர் சாலை சீனிவாச நகர் 5வது குறுக்கு பிரதான சாலை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தற்போது அந்தோணிசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்
மீரா ஜாஸ்மின் எஸ் எஸ் எல் சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்.
அதன் பின்னர் திருச்சியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம் எஸ் சி முடித்தார். பல்கலைக்கழக தேர்விலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
எரித்துக் கொலை:
நேற்று முன்தினம் தனது தாயாரிடம் வேலை தேடிச் செல்வதாக கூறி சென்றார்
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
மகள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் தாயார் கலாவதி அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.
முழுமையாக ரிங்க் போய் கட் ஆனது. ஆனால் போனை யாரும் எடுக்கவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த கலாவதி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தார்.
இதற்கிடையே திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள சிறுகனூர் சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் இளம்பெண் ஒருவர் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடக்கும் தகவல் வெளியானது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மீரா ஜாஸ்மின் என்பது தெரியவந்தது.
உடலின் அருகே அவரது கைப்பை செல்போன் காலணிகள் கிடந்தன. பீர் பாட்டில்களும் கிடந்தன.
உடல் பாதி நிர்வாண நிலையில் கிடந்தது. கூட்டு பலாத்காரம் செய்த பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருக்க
உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் கல்லூரியில் படித்த போது அவருடன் ஒன்றாக படித்த தோழியின் அண்ணன் ஒருவரை தீவிரமாக காதலித்து வந்ததும் பின்னர் ஒரு கட்டத்தில் அவரை பிரிந்ததால் விரக்தி அடைந்த தோழியின் அண்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்து உள்ளது.
ஆகவே அவரின் தற்கொலைக்கு பழிக்கு பழியாக காதலனின் உறவினர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மீராஜாஸ்மின் செல்போனை கைப்பற்றி கடைசியாக அவர் யாரிடம் பேசினார் போன்று விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளனர். மாயமான பட்டதாரி இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சிறுகனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடலை வாங்க
மறுத்து போராட்டம்:
இந்நிலையில் பாதி எரிந்த நிலையில் சிறுகனூர் வனப் பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பட்டதாரி இளம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அவரது தாய் இச்சம்பவம் குறித்தும், இதில் ஈடுபட்டவர்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போலீசாரிடம் கேட்டனர்.
இதற்கு போலீசார்
உரிய பதில் அளிக்கவில்லை.
இதனை கண்டித்தும்
இச்சம்பவம் குறித்து உரிய தகவலை தெரிவிக்க வேண்டும் .இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது பி.சி.ஆர் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டும். மேலும் இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் இங்கு வந்து உரிய தகவலை தெரிவிப்பர் என திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை தற்காலிகமா கைவிட்டனர்.இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனை பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

