முதல்வர் விஜய் ,அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.ராஜா தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திரா கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அவர்கள், மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர், தமிழக ஊராக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வியாழன் கிழமை முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இதில் அக்பர் அலி, நந்தகுமார், சுப்பிரமணி, சதீஷ்குமார்,சரண்ராஜ், ஆசிப்,சிவா, கோகுல்,தனசேகர், கார்த்திக், தாஜுதீன், திருவானைக்காவல் சங்கர், புகழேந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

