எடமலைப்பட்டி புதூரில் கார் டிரைவர் மர்ம சாவு .
மனைவி அளித்த புகாரில் போலீசார் விசாரணை.

திருச்சி எடமலைப் பட்டிபுதூர் ராமச்சந்திரன் நகர் அப்துல் கலாம் நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (வயது 26. )கார் டிரைவர்.இவருக்கு நாகதேவி (வயது 25) என்ற மனைவியும் சாரா என்ற 7 மாத குழந்தையும் உள்ளது.சையது முஸ்தபா காதல் திருமணம் செய்து கொண்டவர்.
இந்நிலையில் நேற்று
நாக தேவியின் மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்பொழுது வீட்டில் சையது முஸ்தபா மட்டும் தனியாக இருந்து உள்ளார். இந்த நிலையில் நாகதேவி மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது படுக்கை அறையில் சையது முஸ்தபா பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார் .மேலும் அவரது உடலில் மின்விசிறியின் வயர் இருந்து உள்ளது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி நாகதேவி உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் சையது முஸ்தபாவை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் சையது முஸ்தபா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து நாகதேவி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சையது முஸ்தபா எப்படி இறந்தார்.என்ன காரணம் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.