திருச்சியில் இன்று காலை விபத்த விபத்தில்
பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு.
போலீசார் விசாரணை.
திருச்சி புத்தூர் ஆபிசர் காலனியை சேர்ந்தவர் சிராஜுதீன் இவரது மனைவி ஜாபர் நிஷா (வயது 55) இவர் தனது மருமகளுடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.
பிறகு கோவை செல்லும் பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்தனர். பிறகு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற அரசு பேருந்து திருச்சி ஐயப்பன் கோவில் வழியாக வந்து எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள ஜல்லிக்கட்டு சாலையில் ( புதிய கோர்ட் ரோடு ) சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது ஜாபர் நிஷா பஸ்சின் படிக்கட்டுக்கு எதிரே உள்ள சீட்டில் அமர்ந்து இருந்தவர் திடீரென்று எழுந்து பக்கத்து சீட்டுக்கு செல்ல முயன்றார்.அப்பொழுது திடீரென்று பஸ் வளைவில் திரும்பியத்தை தொடர்ந்து அவர் நிலைத்தடுமாறி படிக்கட்டில் விழுந்து அதிலிருந்து உருண்டு சாலையில் ஜாபர் நிஷா கீழே விழுந்தார்.
இதில் ஜாபர் நிஷா தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அங்கு இறந்து ஜாபர் நிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊருக்கு செல்ல இருந்த பெண் பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.