Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொடர் மழை எதிரொலி : திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு .

0

'- Advertisement -

Ad banner

தமிழகத்தில் கனமழை, புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திருச்சி மாவட்டம் உட்பட இன்று (புதன்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.