திருச்சி தெற்கு மாவட்டம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் சார்பாக கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வலையொளி ஒளிப்பதிவு (PODCAST) வெளியீட்டு விழா திருச்சி கரூர் பைபாஸ் சாலை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திவ்யா குணசீலன் வரவேற்புரை ஆற்றினார் .
ஜெயநிர்மலா, சத்யா கோவிந்தராஜ்,
சரண்யா ஆகியோர் முன்னிலை வைத்தனர் .
அமைச்சரும் மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார் .
வலையொலி ஒளி ஒளிப்பதிவு டி கே எஸ் இளங்கோவன் கழகச் செய்தி தொடர்பாளர், சிறப்பு அழைப்பாளர்கள்
மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் வெளியிட்டனர்.
கீதா மைக்கேல் ராஜ் செல்வராஜ் நன்றி உரையாற்றினார் .
இந்நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் சேகரன் செந்தில், செங்குட்டுவன். குணசேகரன், மூக்கன், லீலாவேலு, சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, பகுதி கழக செயலாளர் மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.